search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கொலை"

    • மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ராயபுரம்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கிற பம்ப் அஜய் (வயது 23). ரவுடி. இவர் மீது 3 கொலை, கொள்ளை, மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன.

    நேற்று நள்ளிரவு அவர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் அஜயை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரவுடி அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட ரவுடி அஜய், நண்பர்களுடன் மதுகுடிக்க வந்தபோது பை ஒன்றை கொண்டு வந்து இருந்தார். மதுபோதையில் அந்த பையை நண்பர்கள் மறைத்து வைத்து விளையாடி உள்ளனர். அங்கிருந்து அஜய் புறப்பட தயாரானபோது பை காணமால் போய் இருந்ததால் ஆத்திரத்தில் அவர் நண்பர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளாளல் அஜய்யை வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சங்ககிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் திலக். பிரபல ரவுடி.

    இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா என்கிற அமைப்பின் நகர செயலாளர் மோகன்பாபு என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஓசூர் மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த முனிராஜ் மகன் சசிகுமார் (24) என்பவர் நேற்று சங்ககிரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா முன்னிலையில் சரணடைந்தார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகுமார், சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கான ஆவணங்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.

    • சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் கைதானார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்த இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

    பின்னர் அயோத்தியாப்பட்டணம் அருகில் உள்ள மாசிநாயக்கன்பட்டியில் தனது 2-வது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடையாப்பட்டி வேடியப்பன் கோவில் எதிரே உள்ள சாக்கடை பள்ளத்தில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று ரஞ்சித்தை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 27), சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி (30), சேலம் குகையை சேர்ந்த பிரியாணி மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வாலிபர் மதன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலுக்குள் கொலையுண்ட தாஜ்பூரியா மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
    • திகார் சிறையில் பிரபல தாதா அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி திகார் ஜெயில் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான்.

    ஜெயிலுக்குள் கொலையுண்ட தாஜ்பூரியா மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. யோகேஷ் துண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் அவனை அடித்து கொன்றனர்.

    திகார் சிறையில் பிரபல தாதா அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ரவுடி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது ஜெயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாஜ்பூரியா அடித்துக் கொல்லப்பட்ட போது குறைந்தது 10 போலீசார் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. அம்பலமாகி உள்ளது.

    கொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இது தொடர்பாக திகார் ஜெயில் நிர்வாகம் இதுவரை 30 உதவி கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்துள்ளது.

    தமிழக சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 7 பேர் சஸ்பெண்டு ஆனார்கள். அவர்கள் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ஒரு அறிக்கையை திகார் ஜெயில் நிர்வாகம் டெல்லி துணை நிலை கமிஷனருக்கு சமர்ப்பித்துள்ளது.

    • ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.
    • பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.

    பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த அவர் 2-வது மனைவி பிரியாவுடன், மாசிநா யக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி உடையாப்பட்டி பகுதியில், ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் ரஞ்சித்குமாரை விட்டு பிரிந்து தற்போது கள்ளக்கா தலனுடன் வசித்து வருகிறார். இதனால் ரஞ்சித்குமா ருக்கும், முதல் மனைவியுடன் வசித்து வருபவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் ரவுடி ரஞ்சித்குமார் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக, அவருடை நண்பர்க ளான சேலம் அம்பாள் ஏரிரோடு பகுதியை சேர்ந்த மகி என்கிற மகேந்திர பூபதி (23), ஓமலூரை சேர்ந்த புகழேந்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இக்கொலையில் தொடர்பு டைய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கோட்டார் பட்டக சாலியன்விளை பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29).

    இவரது வீட்டிற்குள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பீச் ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து உடைத்தனர். இதுகுறித்து ரஞ்சித்தின் தாயார் சாந்தி நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சிவசங்கர் உட்பட அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சித் அவரது நண்பர் விக்னேஷ் (29) இருவரும் மோட்டார் சைக்கிளில் பெரிய விளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிவசங்கர் இருவரையும் வழிமறித்தார். அப்போது ரஞ்சித்திடம் என் மீது எப்படி நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த அவரது நண்பர் விக்னேசுக்கும் காயம் ஏற்பட்டது. ரஞ்சித், விக்னேஷின் சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விக்னேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து சிவசங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரஞ்சித் மீது சில வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
    • ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ்பால்.

    பதவியேற்ற ஒரு மாதத்தில் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவர் இதில் தொடர்புடையவராக இருப்பது தெரியவந்தது.

    அஸ்ரப்பின் அண்ணன் அதிக் அகமது பிரபல தாதா ஆவார். ரவுடியான இவர், சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவரது தலைமையிலான ரவுடிகள்தான் ராஜ்பால் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அதிக் அகமதும், அவரது சகோதரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அஸ்ரப் உள்பட 40 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார்.

    கடந்த வாரம் உமேஷ்பால் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதிக் அகமதின் கும்பல்தான் அவரை கொன்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து, பிரயாக் ராஜ் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வேட்டையில் குற்றவாளிகளில் ஒருவரான அர்பாஸ் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், முக்கிய சாட்சி உமேஷ்பாலை மிக அருகில் நின்று சுட்டுக்கொன்ற குற்றவாளியான விஜயக்குமார் என்ற உஸ்மான் சவுத்ரி பிரயாக் ராஜ் நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று இரவு அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ரவுடி உஸ்மான் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டான். இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உஸ்மான் பற்றி தகவல் தெரிவித்தால், ரூ.2.5 லட்சம் பரிசு தருவதாக உத்தரபிரதேசம் போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் ரவுடி கொலையில் மது போதையில் நண்பர்கள் பீர் பாட்டிலால் குத்திக்கொன்றது அம்பலமானது.
    • இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உலகனேரி செங்குன்றம் நகர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற டோரா பாலா (வயது 29). இவர் மீது புதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் டோரா பாலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலாவின் வயிற்றில் பாட்டிலால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டது உறுதி யானது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டோரா பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் வினோத் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது டோரா பாலா, வினோத்தின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து வினோத் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சமரசமாக சென்று விடலாம் என கூறி சம்பவத்தன்று இரவு டோரா பாலாவை மது குடிக்க அழைத்து உள்ளனர். வளர்நகர் பகுதியில் டோரா பாலா, வினோத் மற்றும் நண்பர்கள் ஜெகதீஸ்வரன், மேலூர் மாரி, புலி என்ற விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகிய 6 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் டோரா பாலா, வினோத்திடம் தகராறு செய்து அவரது தாயை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வினோத், ஜெகதீஸ்வரன் உள்பட 5 பேர் பீர் பாட்டிலால் டோரா பாலாவை குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட வினோத் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 32). இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கூலித்தொழிலாளியான அழகுபாண்டி மீது கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் ஆந்திரா மாநிலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, அங்குள்ள முறுக்கு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

    அவர் ஆந்திரா சென்றதும் அவரது மனைவி தனது மகன்களுடன் மதுரை ஒத்தக்கடை அருகே மேல உறங்கான்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அழகுபாண்டி மீதான கொலைமுயற்சி வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    அதில் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக ஆந்திராவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அழகுபாண்டி மேல உறங்கான்பட்டியில் உள்ள மாமனாரின் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று இரவு அழகு பாண்டியின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினர். அழகு பாண்டியும், அவரது மாமனார் மூக்கனும் முன்பக்க அறையில் படுத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்களது வீட்டின் கதவை சிலர் தட்டினர்.

    இதனால் விழித்தெழுந்த மூக்கன் வீட்டின் கதவை திறந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே 5 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அப்போது அந்த நபர்கள், மூக்கனை கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர்.

    அங்கு தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த அழகுபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அழகுபாண்டியை கொன்ற மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இந்தநிலையில் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறைக்குள் படுத்து தூங்கிய அழகுபாண்டியின் மனைவி மற்றும் மகன்கள் எழுந்து வந்தனர். அவர்கள் அழகுபாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அழகுபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி வந்து பார்வையிட்டார். அவர் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகு பாண்டிக்கு ஒத்தக்கடை, மேலூர், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஏராளமான அடிதடி வழக்குகளில் தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் அவருக்கு விரோதிகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆகவே முன் விரோதத்தில் அவரை மர்மநபர்கள் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
    • போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் அஸ்வின் (வயது 28) ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    நேற்று இரவு அப்பகுதியில் உள்ள உறவினரை சந்திக்க அஸ்வின் வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஸ்வின் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. கொலையுண்ட அஸ்வின் தற்போது புதூரில் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அஸ்வின், கடந்த 3 மாதத்திற்கு முன்பு விஜயநல்லூரில் இருந்து புதூருக்கு இடம்மாறி சென்று இருக்கிறார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று இரவு விஜயநல்லூரில் உள்ள உறவினரை சந்திக்க வந்தபோது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்போன் திருடியதால் தலையில் கல்லை போட்டு ரவுடியை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார்.
    • குடிபோதையில் அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசினர் மாணவர் விடுதி வளாகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவரின் மகன் உதயகுமார் என்ற கொக்கி குமார் என்பது தெரியவந்தது. பிரபல ரவடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசா ரணையில் கொக்கி குமாரை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது போலீஸ் நிலை யங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவரும், கொலையான கொக்கி குமாரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ள னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேசின் செல்போனை கொக்கி குமார் திருடி விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த விக்னேஷ் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கொக்கி குமார் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருப்பதை அறிந்த விக்னேஷ் குடிபோதையில் அங்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    போதையில் இருந்த விக்னேஷ், கொக்கி குமாரை கீழே தள்ளி அருகில் இருந்த பாறாங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே கொக்கி குமார் பரிதாபமாக இறந்தார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தலைமறை வாக உள்ள விக்னேஷ் போலீ சார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • முத்துப்பாண்டி செங்கமடை என்ற பகுதியில் ரோட்டோர வயல்வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • பொதுமக்கள் திருவாடானை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்ணைவயல் பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரது மகன் முத்துப்பாண்டி (வயது 42), ரவுடி. இவர் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்த முத்துப்பாண்டி திருவாடானையை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தார். அவருக்கு சிலருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இன்று காலை முத்துப்பாண்டி செங்கமடை என்ற பகுதியில் ரோட்டோர வயல்வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையும், உடலும் தனித்தனியாக கிடந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் திருவாடானை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலங்கப்பட்டது. மோப்ப நாய் கடப்பாகுடி மர அறுவை மில் வரை ஓடிவிட்டு நின்று விட்டது.

    முத்துப்பாண்டியை முன் விரோதம் காரணமாக மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்தப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்த கொலை சம்பவம் திருவாடானை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×